<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>First Steps - Tamil | His Magnificent Love</title>
	<atom:link href="https://www.hismagnificentlove.com/category/first-steps-tamil/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://www.hismagnificentlove.com</link>
	<description>Exulting in God&#039;s Magnificent Love for Us</description>
	<lastBuildDate>Fri, 11 Dec 2020 06:09:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.8.5</generator>
	<item>
		<title>முதலடி 31:  அன்பான நண்பனே, உனக்காக என் ஜெபம்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/31/tamil-step-31/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-31</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/31/tamil-step-31/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Fri, 31 Jan 2020 01:34:00 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3259</guid>

					<description><![CDATA[<p>இந்த அருமையான  வேத பாடங்கள் வழியாக நாம் ஒன்றாக இருந்து ஆண்டவர் இயேசுவின் பின் முதல் அடிகள் எடுத்து வைத்து நம் புது வாழ்வை துவங்கி இருக்கிறோம். நாம் இருவரும் ஒன்றாக ஆண்டவரை பின்பற்றி சென்ற இந்த பிரயாணம் எனக்கு இருந்தது போலவே உனக்கும் பரவசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அன்பான ரட்சகராக இருப்பது  போலவே உனக்கும் இருக்க ஜெபிக்கிறேன். இந்த பாடலின் வரிகள் இவ்வாறாக நாம் ஆண்டவரோடு நடப்பதன் மகிழ்ச்சியை <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/31/tamil-step-31/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/31/tamil-step-31/">முதலடி 31:  அன்பான நண்பனே, உனக்காக என் ஜெபம்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த அருமையான  வேத பாடங்கள் வழியாக நாம் ஒன்றாக இருந்து ஆண்டவர் இயேசுவின் பின் முதல் அடிகள் எடுத்து வைத்து நம் புது வாழ்வை துவங்கி இருக்கிறோம்.</p>
<p>நாம் இருவரும் ஒன்றாக ஆண்டவரை பின்பற்றி சென்ற இந்த பிரயாணம் எனக்கு இருந்தது போலவே உனக்கும் பரவசமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.</p>
<p>ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எனக்கு அன்பான ரட்சகராக இருப்பது  போலவே உனக்கும் இருக்க ஜெபிக்கிறேன். இந்த பாடலின் வரிகள் இவ்வாறாக நாம் ஆண்டவரோடு நடப்பதன் மகிழ்ச்சியை தெரிவிக்கிறது:</p>
<p>&#8220;ஓ இன்ப நாள், இன்ப நாள்,</p>
<p>நான் மறக்க முடியாத நாள்.</p>
<p>இருளில் நான் தேடி அலைந்த போது</p>
<p>இயேசு, என் ஆண்டவரை சந்தித்தேன்.</p>
<p>என்ன அருமையான, ஆதரவான நண்பன் அவர்.</p>
<p>என் இதய வாஞ்சையை நிறைவேற்றினார்.</p>
<p>நிழலானவை மறைந்தன, சந்தோஷத்தை கூறுவேன்.</p>
<p>எல்லா இருளையும் விலக்கி விட்டார்.</p>
<p>மோட்சம் இறங்கி, மகிமை என்னை நிரப்பியது.</p>
<p>சிலுவையின் ரட்சகரால் நான் முழுமை ஆனேன்.</p>
<p>என் பாவங்கள் கழுவப்பட்டது, இரவு வெளிச்சமாக  மாறியது.&#8221;</p>
<p>அன்பான நண்பனே, ஆண்டவர் இயேசுவோடு நீ நடக்க இந்த அழகான பாடல் உன்னை வழி நடத்தும் என்று நம்பிக்கையோடு ஜெபிக்கிறேன். நாளுக்கு நாள் இயேசுவின் மேல் நீ கொண்டிருக்கும் அன்பும், நம்பிக்கையும் வளரவும், தினம்தோறும் ரட்சகர் இயேசுவை பின் பற்றி அவர் போல நீ மாறவும் ஜெபிக்கிறேன்.</p>
<p>&#8220;ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர், பூதலத்தோர், பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும் படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்துவை நாவுகள் யாவும் அறிக்கை பண்ணும் படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்.&#8221;   பிலிப்பியர் 2:9 &#8211; 11.</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/31/tamil-step-31/">முதலடி 31:  அன்பான நண்பனே, உனக்காக என் ஜெபம்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/31/tamil-step-31/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 30: சாட்சி &#8211; நான் முழு உலகத்திற்கும் கூற விரும்புவது</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/30/tamil-step-30/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-30</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/30/tamil-step-30/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2020 01:22:01 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3257</guid>

					<description><![CDATA[<p>தேவன் அன்பானவர். அவருடைய அன்பு ஆண்டவர் இயேசுவின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதிற்கும் இந்த சந்தோஷமான செய்தியை நான் கூற விரும்புகிறேன். நாம் வாசித்த பாடங்களை திருப்பி பார்க்கிறேன். நான் என்னை அர்ப்பணித்து ஆண்டவரை பின்பற்றுவேன் என்று முடிவெடுத்த பின், ஆண்டவர் இயேசு கொடுக்கும் ஆச்சரியமான வாழ்வை எண்ணி பார்கிறேன். ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் என்னுடைய இருதயம் பாவத்தில் கரை பட்டு இருக்கும். அவர் இருப்பதால் என்னுடைய இருதயம் கழுவப்பட்டு சுத்தமாக இருக்கிறது. <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/30/tamil-step-30/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/30/tamil-step-30/">முதலடி 30: சாட்சி – நான் முழு உலகத்திற்கும் கூற விரும்புவது</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேவன் அன்பானவர். அவருடைய அன்பு ஆண்டவர் இயேசுவின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதிற்கும் இந்த சந்தோஷமான செய்தியை நான் கூற விரும்புகிறேன்.</p>
<p>நாம் வாசித்த பாடங்களை திருப்பி பார்க்கிறேன். நான் என்னை அர்ப்பணித்து ஆண்டவரை பின்பற்றுவேன் என்று முடிவெடுத்த பின், ஆண்டவர் இயேசு கொடுக்கும் ஆச்சரியமான வாழ்வை எண்ணி பார்கிறேன்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் என்னுடைய இருதயம் பாவத்தில் கரை பட்டு இருக்கும். அவர் இருப்பதால் என்னுடைய இருதயம் கழுவப்பட்டு சுத்தமாக இருக்கிறது. அதில் அவர் வந்து வாழுகிறார்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் இருளில் நான் தடுமாறுவேன். அவர் இருப்பதால் வெளிச்சத்தில் நான் நடக்கிறேன்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் நான் போகும் வழி எனக்கு தெரியாது. அவர் இருப்பதால் என் வழிகாட்டியாக இருக்கிறார்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் பாவத்தில் மரித்து நரகத்திற்கு போய் இருப்பேன். அவர் இருப்பதால் உயிரோடு இருந்து நித்திய ஜீவனை பெற்று கொள்கிறேன்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் தேவன் என் நியாயாதிபதியாக இருப்பார். இப்பொழுதோ, அவர் எனக்கு பரம தந்தை.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் என்னை விட்டு போகிற நண்பர்கள் இருந்திருப்பார்கள். இப்பொழுது அவர் என்னுடைய எப்போதும் கைவிடாத சினேகிதனாக இருக்கிறார்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் நான் புயலில் அடிபட்டவனாக அருண்டு இருந்திருப்பேன். இப்பொழுது எனக்கு பாதுகாப்பான அடைக்கலமாக அவர் இருக்கிறார்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் எனக்கு சமாதானம் இல்லை. அவர் இருப்பதால் எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு சமாதானம் உண்டு.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இல்லை என்றால் தற்காலிகமான சந்தோஷம் மட்டுமே இருந்திருக்கும். அவர் இருப்பதால் நித்திய மகிழ்ச்சி எனக்கு உண்டு.</p>
<p>ஆண்டவர் இயேசு எனோடு இல்லை என்றால் சாத்தானின் பிடிக்குள் இருந்திருப்பேன். அவர் இருப்பதால் சாத்தானின் அடிமை தனத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன்.</p>
<p>ஆண்டவர் இயேசு என்னோடு இருப்பதால் அன்பான கடவுள், அவருடைய விலை மதிப்பற்ற அன்பு, அவர் கொடுக்கும் அனைத்து ஆசீர்வாதங்களும் எனக்கு உண்டு. மோட்சத்திற்கு செல்லும் பாதையில் நான் இருக்கிறேன்.</p>
<p>ஆண்டவர் என் வாழ்வில் எனக்கு ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். &#8220;நான் உனக்கு செய்த எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு சொல். அவர்களும் என் அருமையான அன்பை அறிய விரும்புகிறேன்&#8221; என்று என்னிடம் கூறுகிறார். அவர் வார்த்தைக்கு கீழ்படிந்து இந்த அருமையான வேத பாடங்களை உனக்கு அனுப்பினேன்<strong>, </strong>நண்பனே.   ஆண்டவருடைய அன்பு  அவரை ரட்சகராக ஏற்றுக்கொண்டஎல்லா மக்களுக்கும் உரியது.</p>
<p><strong>&#8220;</strong>ஆண்டவர் இயேசுவிடம் வாருங்கள். எண்ணி முடியாத ஆசீர்வாதம் நிறைந்த ஒரு வாழ்வை உங்களுக்கு கொடுப்பார்&#8221;.</p>
<p><strong><u>ஜெபம்</u></strong>: <strong>“</strong>அன்பான ஆண்டவர் இயேசுவே<strong>, </strong>சுவிசேஷத்தின் நல்ல செய்தியையும்<strong>, </strong>நீர் கொடுக்கும் ரட்சிப்பை பற்றியும் இந்த உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் நான் எடுத்து சொல்ல எனக்கு உதவி செய்யும். ஆமென்.<strong>” </strong></p>
<p><strong> </strong></p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/30/tamil-step-30/">முதலடி 30: சாட்சி – நான் முழு உலகத்திற்கும் கூற விரும்புவது</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/30/tamil-step-30/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 29: ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழி</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/29/tamil-step-29/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-29</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/29/tamil-step-29/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2020 00:36:46 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3255</guid>

					<description><![CDATA[<p>அன்பான நண்பரே, நீங்கள் இப்படி யோசிக்கிறீர்களா: கிறிஸ்த்தவர்கள் கோருவதைப் போல ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழியா? அப்படியானால் உலகிலுள்ள எல்லா மதங்களும் எப்படி? அவைகள் எல்லாம் கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்காதா? உண்மையை கண்டு பிடித்த என் நண்பர் ரவியை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன்.அவர் உங்களுக்கு தன் வரலாறை சொல்ல போகிறார். ரவி: நான் ஒரு கல்லூரி பட்டம் மற்றும் ஒரு நல்ல வேலை உள்ள ஒரு இளைஞன்.ஆனால் நான் மன அமைதியற்று <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/29/tamil-step-29/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/29/tamil-step-29/">முதலடி 29: ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழி</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>அன்பான நண்பரே, நீங்கள் இப்படி யோசிக்கிறீர்களா: கிறிஸ்த்தவர்கள் கோருவதைப் போல ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழியா? அப்படியானால் உலகிலுள்ள எல்லா மதங்களும் எப்படி? அவைகள் எல்லாம் கடவுளிடம் நம்மை கொண்டு சேர்க்காதா?</p>
<p>உண்மையை கண்டு பிடித்த என் நண்பர் ரவியை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன்.அவர் உங்களுக்கு தன் வரலாறை சொல்ல போகிறார்.</p>
<p><strong><u>ரவி:</u></strong> நான் ஒரு கல்லூரி பட்டம் மற்றும் ஒரு நல்ல வேலை உள்ள ஒரு இளைஞன்.ஆனால் நான் மன அமைதியற்று இருந்தேன். என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று இல்லாமல் இருந்தது. கடவுளுக்காக ஒரு ஆழமான ஆசை என் மனதில் உண்டாயிற்று. நான் “கடவுள் இருக்கிறார், அவர் உன்னதமானவர், இந்த பிரபஞ்சத்தை ஆளுபவர்” என்று நம்பினேன். ஆனால் நான் அவரை எப்படி கண்டுபிடிப்பது, எப்படி அவரிடம் சேருவது என்று அறியாமல் திகைத்தேன்.</p>
<p>என் குடும்பத்தின் மதத்தில் கடவுளை தேட துவங்கினேன். வீட்டிலும் கோவிலிலும் எல்லா சமய சடங்குகளையும் செய்தேன், ஏழைகளுக்கு தருமம் செய்தேன், நோன்பு இருந்து பிரார்த்தனை பண்ணினேன். ஆனால் என்னால் கடவுளை நெருங்க முடிய வில்லை. ஒரு ஆழமான படுகுழி என்னை கடவுளிடம் இருந்து பிரிப்பதாக நான் உணர்ந்தேன்.</p>
<p>நான் மற்ற மதங்களை சுற்றிப் பார்த்தேன். ஒவ்வொரு மதத்திலும் கடவுளை தேடும் பாதை படுகுழி அருகே வந்து நின்று விட்டது! &#8220;நான் எப்படி இந்த பெரிய பாளத்தை கடந்து தேவனை சேர முடியும்?&#8221; என்று கலங்கினேன்.</p>
<p>ஒரு நாள் நான் ஒரு செய்தியை கேட்டேன்: எனக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் படுகுழி என் பாவங்களே என்று. கடவுள் பரிசுத்தரும் தூயருமானவர். நான் பாவம் நிறைந்தவன். என் பாவங்களே கடவுளை அணுக முடியாமல் என்னை பிரிக்கின்றன என்று அறிந்தேன்.</p>
<p>&#8220;தேவனே, நான் என்ன செய்வேன்?&#8221; என்று நம்பிக்கையற்று அழுதேன். &#8220;உனக்கு நம்பிக்கை உள்ளது&#8221; என்று அந்த நற்செய்தி விளம்பினது. &#8220;தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து உன் பாவங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் மரித்தபோது உன் பாவங்களை நீக்கி படுகுழி மேல் உன்னை தேவனிடம் கொண்டு சேர்க்கும் பாலமானார்.”</p>
<p>நான் இயேசுவிடம் ஓடி சென்று அவர் காலடியில் மண்டியிட்டேன். &#8220;ஆண்டவரே, நான் என் பாவங்களுக்காக மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என் பாவங்களை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ளும்” என்று மன்றாடினேன். சிலுவையில் என் தண்டனையை செலுத்தினதினால் ஆண்டவர் இயேசு மகிழ்ச்சியுடன் என் பாவங்களை மன்னித்தார். இப்போது நான் என் பாவ கரையில் இருந்து கழுவ பட்டு சுத்தமாமானேன்!</p>
<p>இயேசு என் கையை பிடித்தார். நாங்கள் ஒன்றாக படுகுழி பக்கம் திரும்பினோம். என்ன ஆச்சரியம்! பாளத்தின் மேல் ஒரு பாலம் இருந்தது. அது சிலுவை வடிவத்தில் இருந்தது! நான் என் ஆண்டவரை பின்பற்றி அந்த பாலத்தின் மேல் சென்றேன். சென்று எனக்காக காத்து கொண்டிருந்த தேவனாகிய பிதாவை சேர்ந்தேன். என் ஆனந்தத்திற்கு அளவு இல்லை. தேவனுடைய பாதத்தில் விழுந்து அவரை துதி செய்தேன்.</p>
<p>நான் திரும்பி மனிதரை கடவுளிடமிருந்து பிரிக்கும் பாவ பாளத்தை தாண்டி அக்கறை நோக்கினேன். அங்கு அநேக மக்கள் கடவுளை அடைய வெவ்வேறு வழிகளில் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அனால் எல்லாரையும் பாவமாகிய படுகுழி நிறுத்தி விட்டது. எந்த மத வழி மூலமும் பாளத்தை அவர்களால் கடக்க முடியவில்லை. ஆண்டவர் இயேசுவிடம் என்னை போல வந்து பாவ மன்னிப்பை பெற்றவர்களோ அவரோடு பெரும் சந்தோஷத்தோடு சிலுவை பாலத்தின் மேல் படுகுழியை தாண்டி தேவனிடம் சேர்ந்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.</p>
<p>இப்போது நான் ஆண்டவர் இயேசு கூறின வசனத்தின் சத்தியத்தை அறிந்தேன்: இயேசு பைபிளில் சொல்கிறார்: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.&#8221; யோவான் 14:6</p>
<p>இது ரவியின் ஆன்மீக பயணம். அவர் இப்போது தன் பழைய பாவ வாழ்க்கையை விட்டு விட்                டு, புது மனிதனாய் ரட்சகர் இயேசுவுக்காக பரிசுத்த வாழ்க்கை வாழ்கிறார். எல்லாருக்கும் கடவுளை சேர ஒரே வழியை எப்படி கண்டு பிடிப்பது என்று சொல்கிறார். நீங்கள் எப்படி, நண்பரே? கர்த்தராகிய இயேசுவிடம் வந்து பாவ மன்னிப்பு பெற்று கடவுளை சேர வழி கண்டீர்களா?</p>
<p><strong><u>ஜெபம்</u></strong>: &#8220;கர்த்தராகிய இயேசுவே, பரிசுத்த தேவனை சேர நீரே ஒரே வழி என்று நான் என் முழு மனதோடு நம்புகிறேன். என் பாவத்திற்காக நீர் சிலுவையில் செய்த தியாகத்தின் மூலம் என்னை தேவனிடம் சேர்த்தத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.”</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/29/tamil-step-29/">முதலடி 29: ஆண்டவர் இயேசு மாத்திரமே கடவுளை சேர ஒரே வழி</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/29/tamil-step-29/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 28:  ஆண்டவராகிய இயேசு திரும்பவும் வருகிறார்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/28/tamil-step-28/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-28</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/28/tamil-step-28/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jan 2020 00:26:37 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3253</guid>

					<description><![CDATA[<p>ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கிறார்! அவருடைய சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு    இருந்தனர். இயேசு நாற்பது நாட்கள் வரை அவர்களோடு இருந்து அவருடைய ராஜ்யத்தை குறித்து அவர்களுக்கு கூறினார். சீடர்களை விட்டு அவர் பரலோகமாகிய மோட்சம் செல்லும் நேரம் வந்தது. அவர்கள் பார்த்து கொண்டுருக்கும் பொழுதே மோட்சத்துக்கு சென்றார். மேகம் அவரை மறைத்து விட்டது. அப்போது இயேசு போவதை பார்த்து கொண்டிருந்த சீடர்களுக்கு முன் வெண்ணிற ஆடை  அணிந்த இரண்டு தேவ தூதர்கள் தோன்றினார். &#8220;வானத்தை ஏன் அண்ணாந்து <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/28/tamil-step-28/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/28/tamil-step-28/">முதலடி 28:  ஆண்டவராகிய இயேசு திரும்பவும் வருகிறார்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆண்டவர் இயேசு உயிரோடு இருக்கிறார்! அவருடைய சீடர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு    இருந்தனர். இயேசு நாற்பது நாட்கள் வரை அவர்களோடு இருந்து அவருடைய ராஜ்யத்தை குறித்து அவர்களுக்கு கூறினார்.</p>
<p>சீடர்களை விட்டு அவர் பரலோகமாகிய மோட்சம் செல்லும் நேரம் வந்தது. அவர்கள் பார்த்து கொண்டுருக்கும் பொழுதே மோட்சத்துக்கு சென்றார். மேகம் அவரை மறைத்து விட்டது.</p>
<p>அப்போது இயேசு போவதை பார்த்து கொண்டிருந்த சீடர்களுக்கு முன் வெண்ணிற ஆடை  அணிந்த இரண்டு தேவ தூதர்கள் தோன்றினார்.</p>
<p><strong>&#8220;</strong><strong>வானத்தை</strong> <strong>ஏன்</strong> <strong>அண்ணாந்து</strong> <strong>பார்த்து </strong><strong>கொன்டிருக்கிறீர்கள்</strong><strong>? </strong><strong>இதே</strong> <strong>இயேசு</strong> <strong>உங்கள்</strong> <strong>முன்</strong> <strong>பரலோகத்திற்கு</strong> <strong>எப்படி</strong> <strong>ஏறி</strong> <strong>சென்றாரோ</strong> <strong>அதே</strong> <strong>போல</strong> <strong>திரும்பவும்</strong> <strong>பரலோகத்தில்</strong> <strong>இருந்து</strong> <strong>வருவார்</strong><strong>&#8221; </strong>என்றனர். இந்த நற்செய்தியை கேட்டு சீடர்கள் மகிழ்ந்தார்கள்.</p>
<p>விசுவாசிகளான நம் ஒவ்வொருவருக்கும் இந்த வாக்குத்தத்தம் எவ்வளவு அருமை ஆனது! நம் ஆண்டவர் திரும்பவும் வருகிறார்!  இதை குறித்து தேவன் என்ன சொல்லி இருக்கிறார்?</p>
<p>இயேசுவின் வருகை பிதாவுக்கு மட்டுமே தெரியும். எக்காள சத்தம் கேட்க தேவ தூதர்களோடு  மேகத்தில் அவர் தம் மகிமையில் வருவார். எல்லாருடைய கண்களும் அவரை காணும்.</p>
<p>ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் அவர் வருவார். இந்த பூமியை நீதியாகவும், நியாயமாகவும் ஆளுகை செய்வார்.</p>
<p>ஆண்டவருடைய பிள்ளைகள் யாவரையும் ஒன்றாக கூட்டி சேர்ப்பார். அவரை பாவத்திலிருந்து விடுதலை செய்யவும் ரட்சகராக ஏற்று கொள்ளாத ஒவ்வொருவரையும் நியாயம் தீர்க்க வருவார்.</p>
<p>வேதம் இதை ஆசீர்வாதமான நம்பிக்கை என்றும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிமையின் வெளிப்படுதல் என்று கூறுகிறது.</p>
<p>ஆண்டவருடைய வருகைக்கு நாம் காத்திருக்கும் பொழுது அவர் நம்மை விழித்திருந்து ஜெபிக்க சொல்லுகிறார்.</p>
<p>வேதத்தில் கடைசி புத்தகமான வெளிப்படுத்தின விசேஷத்தில் <strong>&#8220;</strong><strong>நிச்சயமாகவே</strong> <strong>நான்</strong> <strong>சீக்கிரம்</strong> <strong>வருகிறேன்</strong><strong>&#8221; </strong>என்ற மகிமையான உறுதியை ஆண்டவர் இயேசு கொடுத்திருக்கிறார்.</p>
<p>நாம் பதிலுக்கு சந்தோஷமாக &#8220;<strong>ஆமென்</strong> <strong>ஆண்டவர்</strong><strong>  </strong><strong>இயேசுவே</strong><strong>, </strong><strong>வாரும்</strong><strong>&#8220;</strong> என்போம்.</p>
<p><strong><u>ஜெபம்</u></strong><strong><u>:</u></strong> &#8220;ஆண்டவர் இயேசுவே, உம்முடைய இரண்டாம் வருகைக்கு காத்திருக்கிறோம்.   ஆயத்தமாக இருக்க உதவி செய்யும். ஆமென்&#8221;</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/28/tamil-step-28/">முதலடி 28:  ஆண்டவராகிய இயேசு திரும்பவும் வருகிறார்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/28/tamil-step-28/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 27:  ஆலயம் &#8211; உலகத்தில் நம்முடைய கிறிஸ்தவ குடும்பம்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/27/tamil-step-27/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-27</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/27/tamil-step-27/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2020 00:22:42 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3251</guid>

					<description><![CDATA[<p>இன்று மற்றும் ஒரு ஆலயத்திற்கு செல்லலாம் வாருங்கள். இப்பொழுது நாம் ஒரு வீட்டின்     முன்னால் நிற்கிறோம். இது ஆலய கட்டிடம் இல்லை. உள்ளே போகலாமா? முன் அறையில் ஒரு சில குடும்பங்கள் கூடி இருக்கின்றனர். நம்மை மனமுவந்து வரவேற்கிறார்கள். ஆராதனை துவங்குகிறது. பாடும் பொழுது நம்மோடு இசைக்க வாத்திய கருவி இல்லை. ஆனால் இருதயத்திலிருந்து இனிமையாக பாடல் பாடுகிறோம். மற்ற ஆலயத்தை போல் இங்கும் ஜெபித்து, வேதம் வாசித்து, போதனை கொடுக்க ஒரு தலைவர் இருக்கிறார். ஆராதனை <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/27/tamil-step-27/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/27/tamil-step-27/">முதலடி 27:  ஆலயம் – உலகத்தில் நம்முடைய கிறிஸ்தவ குடும்பம்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்று மற்றும் ஒரு ஆலயத்திற்கு செல்லலாம் வாருங்கள். இப்பொழுது நாம் ஒரு வீட்டின்     முன்னால் நிற்கிறோம். இது ஆலய கட்டிடம் இல்லை. உள்ளே போகலாமா?</p>
<p>முன் அறையில் ஒரு சில குடும்பங்கள் கூடி இருக்கின்றனர். நம்மை மனமுவந்து வரவேற்கிறார்கள். ஆராதனை துவங்குகிறது. பாடும் பொழுது நம்மோடு இசைக்க வாத்திய கருவி இல்லை. ஆனால் இருதயத்திலிருந்து இனிமையாக பாடல் பாடுகிறோம்.</p>
<p>மற்ற ஆலயத்தை போல் இங்கும் ஜெபித்து, வேதம் வாசித்து, போதனை கொடுக்க ஒரு தலைவர் இருக்கிறார். ஆராதனை முடிந்ததும் மற்ற சகோதர, சகோதரிகளோடு சந்தோஷமாக நேரத்தை செலவிடுகிறோம்.</p>
<p>ஆலயம் என்றால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். அது வெறும் கட்டிடம் அல்ல. ஆண்டவர் இயேசுவை ஆராதிக்க கூடி வரு மக்களே அவருடைய ஆலயமாகிய சபை. கூடி வரும் மக்கள் யாவரும் ஒரு குடும்பமாக ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவும், ஜெபிக்கவும், ஆதரவாக இருக்கிறோம்.</p>
<p>உலக முழுவதற்கும் ஒரு ஆலயம் இருக்கிறது என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? ஆண்டவர் இயேசுவின் மேல் நம்பிக்கை வைத்து அவரை பின்பட்ற தீர்மாநிதவர்களாகிய உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களே அவருடைய ஆலயம் ஆவார்.</p>
<p>இந்த ஆலயத்திற்கு ஆண்டவர் ஏசுவே தலைவர். இது இயேசுவின் சரீரமாக அழைக்க படுகிறது. ஆண்டவர் இயேசு அவருடைய ஜீவனை கொடுத்து ஆதரிக்கிற ஆலயம் இது. வேதத்தில் <strong><u>எபேசியர் </u></strong><strong><u>5:23</u></strong> இல் <strong>&#8220;கிறிஸ்து சபைக்கு </strong><strong>தலையாய்</strong> <strong>இருக்கிறார். அவரே சரீரத்திற்கும் ரட்சக</strong><strong>ராய்</strong> <strong>இருக்கிறார்</strong><strong>&#8221; </strong>என்று கூறபடுகிறது.</p>
<p>நீங்கள் இதை வாசிக்கும் பொழுதே உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும், உங்கள் பாரம்பரியம், மொழி எதுவாக இருந்தாலும், ஆண்டவர் இயேசுவின் ஆலயமாய் இருக்கிறீர்கள். ஆண்டவருக்குள் என்னுடைய சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறீர்கள்.</p>
<p>இது ஆச்சரியமாக இல்லையா? நான் உங்களை நேசிக்கிறேன். உங்களுக்காக ஜெபிக்கிறேன். இந்த பகுதியை நீங்கள் வாசிக்கும் பொழுதே என்னோடு சேர்ந்து ஆண்டவர் இயேசுவை அவருடைய குடும்பத்தோடு ஆராதிப்பதை சந்தோஷ படுகிறீர்கள?</p>
<p><strong><u>ஜெபம்</u></strong>: “ஆண்டவர் ஏசுவே, உலகம் முழுவதில் உள்ள ஆலயத்தின் குடும்பத்தோடு என்னையும் ஒருவராக ஏற்று கொண்டதற்காக நன்றி. ஆமென்.”</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/27/tamil-step-27/">முதலடி 27:  ஆலயம் – உலகத்தில் நம்முடைய கிறிஸ்தவ குடும்பம்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/27/tamil-step-27/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 26:  ஆலயத்தில் தேவனை தொழுது கொள்ளுதல்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/26/tamil-step-26/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-26</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/26/tamil-step-26/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Jan 2020 00:21:00 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3249</guid>

					<description><![CDATA[<p>இன்று ஒரு ஞாயிற்று கிழமை. நான் மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஆண்டவரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்கிறேன். நீயும் என்னோடு வர விரும்புவது எனக்கு மிக சந்தோசம். ஏன் கிறிஸ்தவர்கள் ஞாயிற்று கிழமை ஆலயதிற்கு செல்லுகிறார்கள்? வாரத்தின் முதல் நாள் ஞாயிற்று கிழமை ஆண்டவர் இயேசு கல்லறையில் இருந்து உயிரோடு எழுந்தார். உலகிலுள்ள அணைத்து கிறிஸ்தவர்களும் ஞாயிற்று கிழமை ஆண்டவரை ஆராதிக்கவும் நன்றி செலுத்தவும் அவருக்கு துதி செலுத்தவும் ஆலயத்தில் கூடுகிறார்கள். ஞாயிற்று கிழமை ஆண்டவருடைய நாள் என்று <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/26/tamil-step-26/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/26/tamil-step-26/">முதலடி 26:  ஆலயத்தில் தேவனை தொழுது கொள்ளுதல்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>இன்று ஒரு ஞாயிற்று கிழமை. நான் மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஆண்டவரை ஆராதிக்க ஆலயத்திற்கு செல்கிறேன். நீயும் என்னோடு வர விரும்புவது எனக்கு மிக சந்தோசம்.</p>
<p>ஏன் கிறிஸ்தவர்கள் ஞாயிற்று கிழமை ஆலயதிற்கு செல்லுகிறார்கள்? வாரத்தின் முதல் நாள் ஞாயிற்று கிழமை ஆண்டவர் இயேசு கல்லறையில் இருந்து உயிரோடு எழுந்தார்.</p>
<p>உலகிலுள்ள அணைத்து கிறிஸ்தவர்களும் ஞாயிற்று கிழமை ஆண்டவரை ஆராதிக்கவும் நன்றி செலுத்தவும் அவருக்கு துதி செலுத்தவும் ஆலயத்தில் கூடுகிறார்கள். ஞாயிற்று கிழமை ஆண்டவருடைய நாள் என்று பிரித்தெடுத்து அன்று அவரை ஆராதிக்கின்றனர்.</p>
<p>ஆலயத்தின் மேற் புறத்தில் சிலுவை வைக்கபட்டிருபதை நீ பார்த்திருக்கிறாயா? ஆலயத்தின் மேல் ஒரு சிலுவையும் உள்ளே ஆராதிக்கின்ற இடத்தில் இன்னொன்றும் பார்க்கலாம். கிறிஸ்தவர்களுக்கு சிலுவை ஓர் விலை ஏறபெற்ற அடையாளம். அது பாவத்தில் இருந்து மனுக்குலத்தை மீட்க இயேசு சிலுவையில் தம் ஜீவனை கொடுத்ததை நினைவு படுத்துகிறது.</p>
<p>ஆலயத்திற்கு உள்ளே சென்று அமைதியாக உட்காரலாமா? அங்கே மற்ற கிறிஸ்தவர்கள் அமர்ந்திருப்பதை காண்கிறோம். அமைதியாக அமர்ந்து ஆண்டவர் இயேசுவை ஆராதிக்க நம்மை ஆய்த படுத்தி கொள்வோம்.</p>
<p>ஆர்கனிலிருந்து அழகாக வெளிப்படும் இசையின் சத்தத்தை கேட்க்கும் பொழுது நமது சிந்தனை ஓர் முகமாய் ஆண்டவரை நோக்கி உயர்த்த படுகிறது. ஆண்டவரின் பிரசன்னத்தை ஆலயத்தில் நாம் உணருகிறோம்.</p>
<p>ஆலய தலைவர் ஒருவர் ஆலயத்தில் இருக்கிறார். அனைத்து மக்களுக்கும் ஆவிக்குரிய தலைவராக இருக்கிறார். நாம் ஆண்டவரை ஆலயத்தில் ஆராதிக்கும் படி நம்மை வழி நடத்துகிறார். இயேசுவை குறித்து பாடல்களை சந்தோஷமாக நாம் பாடி அவரை துதிக்கிறோம். தலைவர் ஜெபிக்கிறார். பைபிள் இல் இருந்து வேத வார்த்தைகள் வாசிக்க படுகிறது. அவைகளை விளக்கமாக தலைவர் போதித்து சொல்லி கொடுக்கிறார். ஆசீர்வதத்தோடு ஆராதனை முடிகிறது.</p>
<p>ஆராதனை முடிந்த உடன் மற்ற மக்களை வெளியில் சந்திக்கிறோம். சந்தோஷமாக பேசுகிறோம். அவர்களும் ஆண்டவருடைய பிள்ளைகள்.  அதனால் நாம் எல்லாரும் ஒரே குடும்பம், ஆண்டவருடைய குடும்பம். அவர்கள் நம்முடைய சகோதர சகோதரிகள். ஆண்டவர் இயேசுவை ஏற்று கொண்ட அனைவருக்கும் அவர் பரம தகப்பன்.</p>
<p>வேதத்தில் தாவீது என்ற அரசன்  <u>சங்கீதம்</u> <u>122  : 1</u> இல் &#8220;கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்ன பொது மகிழ்ச்சியாய் இருந்தேன்&#8221; என்று கூறுகிறார்.</p>
<p><strong><u>ஜெபம்</u></strong><u>:</u> &#8220;சர்வ வல்ல ஆண்டவரே, மற்ற விசுவாசிகளோடு உம்மை ஆராதிக்க கொடுத்த ஆலயத்துக்காகவும் எங்களை<strong> </strong>உம்முடைய சந்நிதிக்கு அழைத்ததற்காகவும் நன்றி செலுத்துகிறேன்<strong>.  </strong>ஆமென்&#8221;</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/26/tamil-step-26/">முதலடி 26:  ஆலயத்தில் தேவனை தொழுது கொள்ளுதல்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/26/tamil-step-26/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 25:  இரட்சிப்பை தொடர்ந்து நற்கிரியைகள்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/25/tamil-step-25/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-25</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/25/tamil-step-25/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Jan 2020 00:18:31 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3247</guid>

					<description><![CDATA[<p>அன்பான சிநேகிதரே, அமைதியாக நாம் அமர்ந்து ஆண்டவர் அதிசயமாக இலவசமாய் அளித்திருக்கும்  இரட்சிப்பை பற்றியும், நித்திய ஜீவனை கொடுப்பேன் என்ற உறுதி மொழியையும் நினைத்து பார்ப்போம். இரட்சிப்பு,  விடுதலை, இலவசமாக ஆண்டவர் தருவது. நாம் செய்யும் கிரியைகளுக்கு பரிசாகவோ, அல்லது தியாகத்தாலோ இரட்சிப்பு பெற முடியாது. ஆண்டவர் கொடுக்கும் இரட்சிப்புக்கு நாம் பதில் ஒன்றும் செய்ய முடியாது. அல்லது அதை சம்பாதிக்கவும் முடியாது. அது தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் வெகுமதி. இயேசுவின் அன்பால் பாவிகளாகிய நமக்கு அவர் கொடுப்பது. <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/25/tamil-step-25/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/25/tamil-step-25/">முதலடி 25:  இரட்சிப்பை தொடர்ந்து நற்கிரியைகள்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>அன்பான சிநேகிதரே, அமைதியாக நாம் அமர்ந்து ஆண்டவர் அதிசயமாக இலவசமாய் அளித்திருக்கும்  இரட்சிப்பை பற்றியும், நித்திய ஜீவனை கொடுப்பேன் என்ற உறுதி மொழியையும் நினைத்து பார்ப்போம்.</p>
<p>இரட்சிப்பு,  விடுதலை, இலவசமாக ஆண்டவர் தருவது. நாம் செய்யும் கிரியைகளுக்கு பரிசாகவோ, அல்லது தியாகத்தாலோ இரட்சிப்பு பெற முடியாது. ஆண்டவர் கொடுக்கும் இரட்சிப்புக்கு நாம் பதில் ஒன்றும் செய்ய முடியாது. அல்லது அதை சம்பாதிக்கவும் முடியாது.</p>
<p>அது தகுதியற்றவர்களுக்கு கொடுக்கப்படும் வெகுமதி. இயேசுவின் அன்பால் பாவிகளாகிய நமக்கு அவர் கொடுப்பது. வேதத்தில் இது கிருபை என்று சொல்லப்படுகிறது. வேதத்தில் ஆண்டவர் <strong>&#8220;</strong><strong>கிருபையினாலே</strong> <strong>விசுவாசத்தை</strong> <strong>கொண்டு</strong> <strong>இரட்சிக்கப்பட்டீர்கள்</strong><strong>. </strong><strong>இது</strong> <strong>கிரியையினால்</strong> <strong>உண்டானது</strong> <strong>அல்ல</strong><strong>&#8220;</strong> என்று கூறியிருக்கிறார்.  நம்மால் நம்மை இரட்சித்து கொள்ள முடியாது.  இயேசு மேல் நாம் கொண்டுள்ள  நம்பிக்கை மாத்திரமே நமக்கு நித்திய ஜீவனை தருகிறது. சுவிசேஷத்தின் எளிமையான ஆனால் அழகான உண்மை இது.</p>
<p>நீங்கள் ஒரு வேளை இப்படி நினைக்க துவங்கலாம்: &#8220;நான் இரட்சிப்பை பெற்றிருக்கிறேன். இயேசு என் பாவங்களை மன்னித்திருக்கிறார். பரலோகத்திற்கு என்னை அழைத்து செல்வார். நான் ஏன் நல்ல கிரியைகள் செய்ய வேண்டும்? நான் எனக்கு விருப்பமான காரியத்தை செய்வேன்&#8221;   அப்படி நாம் செய்யலாமா? அதை குறித்து பார்ப்போம்.</p>
<p>ஆண்டவர் இயேசுவிடம் நாம் பாவமன்னிப்பு கேட்கும் போது நம்மை பரிசுத்தப்படுத்தி புதிதாக்குகிறார்.  நாம் இப்பொழுது ஆண்டவர் குடும்பத்தில் மறுபடியும் பிறந்திருக்கிறோம். பிறந்த சிறு குழந்தை போல நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை துவங்குகிறோம். சிறு குழந்தை எப்படி தாயை சார்ந்து இருக்கிறதோ அப்படியே நாமும் ஆண்டவரை சார்ந்து இருக்கிறோம். ஆண்டவர் நம்மை கை பிடித்து நடத்துகிறார். அவர் நமக்கு ஏற்படுத்தியிருக்கும் வாழ்வு வெருமையானதல்ல.   அது அவருக்கென்று நாம் நல்ல கிரியைகள் செய்ய ஏற்படுத்தப்பட்ட நிறைவான வாழ்வு.</p>
<p>பழைய பாவ விருப்பங்கள் இப்பொழுது நம்மை விட்டு போய் விட்டது. நாம் அவைகளை இப்போது வெறுக்கிறோம். சாத்தானால் பழைய வாழ்க்கைக்கு செல்ல சோதிக்கப்பட்டாலும்  நாம் ஆண்டவரை தேடி அவர் பலனை பெற்று கொண்டு அவைகளை மறுக்கிறோம்.</p>
<p>வேதத்தில் எபேசியர் 2:10  இல் வாசிக்கிறோம்: <strong>&#8220;</strong><strong>நற்கிரியைகளை</strong> <strong>செய்கிறதற்கு</strong> <strong>நாம்</strong> <strong>கிறிஸ்து</strong> <strong>இயேசுவுக்குள்</strong> <strong>சிருஷ்டிக்கப்பட்டு</strong><strong>, </strong><strong>தேவனுடைய</strong> <strong>செய்கையாய்</strong> <strong>இருக்கிறோம்</strong><strong>. </strong><strong>அவைகளில்</strong> <strong>நாம்</strong> <strong>நடக்கும்படி</strong> <strong>அவர்</strong> <strong>முன்னதாக</strong> <strong>அவைகளை</strong> <strong>ஆய</strong><strong>த்</strong><strong>தம்</strong> <strong>பண்ணியிருக்கிறார்</strong><strong>.&#8221; </strong></p>
<p>ஆண்டவர் என்ன நற்கிரியைகள் நமக்கு வைத்து இருக்கிறார்? மற்றவர்களுக்கு சேவை செய்வது ஆண்டவருக்கு செய்யும் சேவையே &#8211; எல்லாரிடமும் அன்புடனும் தயவுடனும் இருப்பது, மக்களுக்கு தேவையான உதவி சந்தோஷமாக செய்வது, யாவருக்கும் ஆண்டவர் இயேசுவை பற்றியும் ரட்சிப்பை பற்றியும் சொல்வது, போன்றவைகளே.</p>
<p>அன்பான சிநேகிதரே, நாம் ஆண்டவர் கொடுத்திருக்கும் ஆச்சரியமான இரட்சிப்பில் மகிழும் போது, அவர் நம்மை மோட்சத்துக்கு செல்ல அழைக்கும் வரை, இந்த வாழ்க்கையில் என்ன நல்ல கிரியைகள் செய்ய அழைத்து இருக்கிறார் என்று ஆவலாய் அறிந்து கொள்ளுவோமாக. அதை சந்தோஷமாக செய்ய முற்படுவோமாக.</p>
<p><strong>ஜெபம்</strong><strong>:</strong> &#8220;பரலோக தந்தையே, அர்த்தமற்ற சுயநலமான வாழ்வை நான் வாழாத படி உமக்கென்று நல்ல கிரியைகள் செய்கிற புதிய வாழ்வை வாழ உதவி செய்யும், ஆமென்&#8221;</p>
<p>&nbsp;</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/25/tamil-step-25/">முதலடி 25:  இரட்சிப்பை தொடர்ந்து நற்கிரியைகள்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/25/tamil-step-25/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 24: ஆண்டவரை நேசித்தல், பாவத்தை வெறுத்தல்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/24/tamil-step-24/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-24</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/24/tamil-step-24/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Fri, 24 Jan 2020 00:15:27 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3245</guid>

					<description><![CDATA[<p>பாவம் என்பது என்ன? ஆண்டவர் யேசுவிடம் வரும் வரை நான் பாவத்தை பற்றி இப்படி நினைத்திருந்தேன்: ஒரு சிறு பொருளை திருடினால் அது ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போன்ற பெரிய பாவம் அல்ல. நான் வெறுக்கும் சிலருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் நான் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. மற்ற குற்றவாளிகளை போல நான் சிறையில் இல்லை. அதனால் நான் ஒரு நல்லவன் என்று நினைத்து கொள்வேன். நான் பாவி அல்ல, <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/24/tamil-step-24/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/24/tamil-step-24/">முதலடி 24: ஆண்டவரை நேசித்தல், பாவத்தை வெறுத்தல்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாவம் என்பது என்ன? ஆண்டவர் யேசுவிடம் வரும் வரை நான் பாவத்தை பற்றி இப்படி நினைத்திருந்தேன்:</p>
<p>ஒரு சிறு பொருளை திருடினால் அது ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போன்ற பெரிய பாவம் அல்ல. நான் வெறுக்கும் சிலருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நான் சந்தோஷப்படுகிறேன். ஆனால் நான் அவர்களுக்கு எந்த தீங்கும் செய்யவில்லை. மற்ற குற்றவாளிகளை போல நான் சிறையில் இல்லை. அதனால் நான் ஒரு நல்லவன் என்று நினைத்து கொள்வேன். நான் பாவி அல்ல, அதனால் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்க தேவை இல்லை என்று எண்ணிக்கொள்வேன். அது எவ்வளவு பெரிய தவறு என்று அறிந்தேன்.</p>
<p>ஆண்டவர் பார்வையில் சிறு பாவம், பெரு பாவம் இல்லை. ஆண்டவர் சில சட்டங்களை வேதத்தில் யாத்திராகமம் 20:3-17 இல் கொடுத்திருக்கிறார். அது</p>
<p>‘பத்து கட்டளைகள்’ என்று சொல்லப்படும். ஒரு கட்டளையில் தவறினாலும் அது பாவம். ஆண்டவர் இயேசு இந்த எல்லா கட்டளைகளையும் சேர்த்து எளிதான முறையில் சொல்லியிருக்கிறார்: &#8220;கடவுளை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டும். நம்மை நேசிப்பது போல் மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்.&#8221;</p>
<p>எல்லா பாவங்களுமே ஆண்டவருக்கு அல்லது மற்றவர்களுக்கு விரோதமானவை ஆகும். என் இருதயத்தின் உள்ள எல்லாவற்றையும் ஆண்டவர் அறிந்து இருக்கிறார். நான் செய்வதை மட்டும் அவர் பார்க்காமல் அதினுடைய நோக்கத்தையும் அறிந்திருக்கிறார். அவரிடமிருந்து என்னால் எதையும் மறைக்க முடியாது. வெளியே நான் நல்லவனாக வேஷம் போட்டு உள்ளே கெட்டவனாக இருந்து தேவனை ஏமாற்ற  முடியாது.</p>
<p>ஆண்டவருடைய பார்வையில் நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உணர்ந்திருக்கிறேன். ஆண்டவரை நான் நேசிக்கிறேன். அவர் வெறுப்பதை நான் செய்ய விரும்ப வில்லை. என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் மன்னிக்கும் படியாக தாழ்மையோடு அவரிடம் கேட்கிறேன்.</p>
<p>இப்பொழுது ஆண்டவருக்கு மகிமையை கொண்டு வரும் வாழ்க்கையை வாழ விரும்புகிறேன். பழைய பாவ வாழ்வுக்கு மறுபடியும் நான் திரும்பவும் சென்று எனக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்த ஆண்டவரை ஒரு பொழுதும் துக்க படுத்த நான் விரும்ப வில்லை.</p>
<p>வேதம் கூறுகிறது: &#8220;ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின&#8221;</p>
<p>2 கொரிந்தியர் 5:17 இந்த ஜெபத்தை நீயும் ஜெபிக்க விரும்புகிறாயா<strong>, </strong>சிநேகிதனே?</p>
<p><strong><u>ஜெபம்:</u></strong> &#8220;ஆண்டவரே, என்னுடைய இருந்தயத்தை முழுமையாக உம்மிடம் ஒப்பு கொடுக்கிறேன். பாவம் செய்யாமல் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்&#8221;</p>
<p>&nbsp;</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/24/tamil-step-24/">முதலடி 24: ஆண்டவரை நேசித்தல், பாவத்தை வெறுத்தல்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/24/tamil-step-24/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 23: ஆண்டவரை முழு இருதயத்தோடு நேசித்தல்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/23/tamil-step-23/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-23</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/23/tamil-step-23/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Jan 2020 00:13:08 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3243</guid>

					<description><![CDATA[<p>கடவுள் கொடுத்த கட்டளைகளில் முக்கியமானது எது என்று ஒரு மனிதன் ஆண்டவர் இயேசுவை கேட்டான். அதற்க்கு அவர் மறு மொழியாக &#8220;தேவனிடத்தில் முழு இருதயதோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலனோடும் அன்பு கூற வேண்டும்&#8221; என்றார். இப்படி நான் எப்படி ஆண்டவரை அன்பு கூற முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவருடைய வெளிச்சத்தை என் இருதயத்தில் தந்து எனக்கு புரிய வைத்தார். நான் முழுமையாக அவரை அன்பு கூறுவதையும் முழுமையாக என்னை <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/23/tamil-step-23/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/23/tamil-step-23/">முதலடி 23: ஆண்டவரை முழு இருதயத்தோடு நேசித்தல்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடவுள் கொடுத்த கட்டளைகளில் முக்கியமானது எது என்று ஒரு மனிதன் ஆண்டவர் இயேசுவை கேட்டான்.</p>
<p>அதற்க்கு அவர் மறு மொழியாக &#8220;தேவனிடத்தில் முழு இருதயதோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும், முழு பெலனோடும் அன்பு கூற வேண்டும்&#8221; என்றார்.</p>
<p>இப்படி நான் எப்படி ஆண்டவரை அன்பு கூற முடியும் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் அவருடைய வெளிச்சத்தை என் இருதயத்தில் தந்து எனக்கு புரிய வைத்தார்.</p>
<p>நான் முழுமையாக அவரை அன்பு கூறுவதையும் முழுமையாக என்னை அவருக்கு ஒப்பு கொடுப்பதையும் அவர் விரும்புகிறார். என் வாழ்க்கையில் அவருக்கு முதல் இடத்தை கொடுப்பதையே ஆண்டவர் விரும்புகிறார்.</p>
<p>ஆண்டவர் எனக்கு செய்த எல்லாவற்றையும் நினைத்து பார்க்கிறேன்:</p>
<p>** என் தாயின் கருவில் என்னை உருவாக்கி எனக்கு உயிர் கொடுத்தார்.</p>
<p>** இந்த வாழ்வில் நான் பெற்றிருக்கும் சகல ஆசீர்வதங்களையும் அவர் கொடுத்திருக்கிறார்.</p>
<p>** தன் சொந்த குமாரனையே தந்து பாவ வழிகளில் இருந்து என்னை மீட்டு எடுத்து புது வாழ்வை கொடுத்திருக்கிறார்.</p>
<p>** பரிசுத்த ஆவியானவரை எனக்கு தந்து என் வாழ்நாள் முழுவதும் என்னை வழி நடத்துகிறார்.</p>
<p>** என்னுடைய வாழ்வில் வரும் எல்லா போராட்டங்களிலும் என்னோடிருந்து என்னை காத்து வழி நடத்துகிறார்.</p>
<p>** மோட்சத்தில் எப்பொழுதும் அவரோடு வாழ ஒரு வாசஸ்தலத்தை ஆயதம் பண்ணியிருக்கிறார்.</p>
<p>இவ்வளவு மகத்தான ஆசீர்வாதங்களை எனக்கு தந்த என் அன்பின் ஆண்டவரை நான் எப்படி நேசிக்காமல் இருக்க முடியும்?</p>
<p>நான் அவரிடம் எப்படி என் அன்பை காண்பிக்கலாம் என்று சிந்தித்தேன்.  பரிசுத்த ஆவியானவர் அதற்க்கான வழியை எனக்கு காட்டினார்.</p>
<p>முதலாவது, முக்கியமானது: தேவன் எதை வெறுக்கிறாரோ அதை நானும் வெறுக்க வேண்டும். தேவன் வெறுப்பது நம் பாவம். அதனால் நானும் பாவத்தை வெறுக்க வேண்டும். அடுத்த பாடத்தில் ஆண்டவருடைய பார்வையில் பாவம் என்பது என்ன என்று பார்ப்போம்.</p>
<p><strong><u>ஜெபம்:</u></strong> &#8220;பரலோகத்தின் தகப்பனே, என் முழு இருதயத்தோடு நான் உம்மில் அன்பு கூற எனக்கு உதவி செய்யும். ஆமென்<strong>&#8221; </strong></p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/23/tamil-step-23/">முதலடி 23: ஆண்டவரை முழு இருதயத்தோடு நேசித்தல்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/23/tamil-step-23/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>முதலடி 22: ஆண்டவராகிய இயேசு சாத்தானை ஜெயித்தவர்</title>
		<link>https://www.hismagnificentlove.com/2020/01/22/tamil-step-22/?utm_source=rss&#038;utm_medium=rss&#038;utm_campaign=tamil-step-22</link>
					<comments>https://www.hismagnificentlove.com/2020/01/22/tamil-step-22/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Vasantha Wilfred]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2020 23:19:57 +0000</pubDate>
				<category><![CDATA[First Steps - Tamil]]></category>
		<guid isPermaLink="false">http://www.hismagnificentlove.com/?p=3186</guid>

					<description><![CDATA[<p>நம்மை சாத்தானின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வந்த ஆண்டவர் இயேசுவை துதிக்கிறேன். இரட்சிக்கப்பட்ட நாம் ஆண்டவர் இயேசுவுக்கு சொந்தமானவர்கள். அவருடைய பராமரிப்புக்குள் இருக்கும் நாம் அவருடைய பிள்ளைகள். சாத்தான் தோற்கடிக்கப்பட்ட பகைவன். சாத்தான் இந்த உலகத்தையும் அதிலுள்ள மக்களையும் ஆளுகை செய்கிறான். வேதம் சாத்தானை பிசாசு என்றும் இந்த உலகத்தை ஆள்பவன் என்றும் சொல்லுகிறது. ஆண்டவர் சாத்தானை சிறிது காலம் இந்த உலகத்தில் விடுதலையாக விட்டிருக்கிறார். சீக்கிரத்தில் சாத்தானையும், அவனுடைய தூதர்களையும் அவர்களுக்காக ஏற்ப்படுத்தின நரகத்தில் தள்ளி <a class="more-link" href="https://www.hismagnificentlove.com/2020/01/22/tamil-step-22/">Read More ...</a></p>
The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/22/tamil-step-22/">முதலடி 22: ஆண்டவராகிய இயேசு சாத்தானை ஜெயித்தவர்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></description>
										<content:encoded><![CDATA[<p>நம்மை சாத்தானின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க வந்த ஆண்டவர் இயேசுவை துதிக்கிறேன்.</p>
<p>இரட்சிக்கப்பட்ட நாம் ஆண்டவர் இயேசுவுக்கு சொந்தமானவர்கள். அவருடைய பராமரிப்புக்குள் இருக்கும் நாம் அவருடைய பிள்ளைகள். சாத்தான் தோற்கடிக்கப்பட்ட பகைவன். சாத்தான் இந்த உலகத்தையும் அதிலுள்ள மக்களையும் ஆளுகை செய்கிறான். வேதம் சாத்தானை பிசாசு என்றும் இந்த உலகத்தை ஆள்பவன் என்றும் சொல்லுகிறது.</p>
<p>ஆண்டவர் சாத்தானை சிறிது காலம் இந்த உலகத்தில் விடுதலையாக விட்டிருக்கிறார். சீக்கிரத்தில் சாத்தானையும், அவனுடைய தூதர்களையும் அவர்களுக்காக ஏற்ப்படுத்தின நரகத்தில் தள்ளி விடுவார்.</p>
<p>ஆதாம், ஏவாளுக்கும் தேர்ந்து எடுக்கும் உரிமையை கொடுத்திருந்த தேவன் நமக்கும் நம் வாழ்வில் தேர்ந்து எடுக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். நாம் ஆண்டவரை நேசித்து, கீழ்படிந்து அவர் பிள்ளையாக வாழலாம்.</p>
<p>ஆண்டவர் இயேசுவை என் சொந்த ரட்சகராக ஏற்று கொண்ட போது நான் அவருடைய பக்கம் சார்ந்தேன். சாத்தானிடமிருந்து நான் விடுதலை பெற்றேன். இப்பொழுது அவன் என்னுடைய பகைவன். ஆண்டவர் என்னை நேசிக்கவில்லை என்று என்னை நம்ப வைத்து அவரை விட்டு என்னை பிரிப்பதே சாத்தானுடைய நோக்கமாக இருக்கிறது.</p>
<p>சாத்தான் வல்லமை உள்ளவன். அவன் இப்பொழுது என்னை எப்படியாகிலும் மறுபடியும் தன் பக்கம் கொண்டு செல்ல பிரயாச படுகிறான். இந்த உலகின் கவர்ச்சியையும் ஆடம்பரத்தையும் காட்டி என்னை சோதிக்கிறான். உபத்திரவங்களையும் பாடுகளையும் கொடுத்து என்னை தடுமாற செய்கிறான்.</p>
<p>ஆனால் வேதம் கூறுகிறது &#8220;உலகத்தில் இருக்கிறவனை பார்க்கிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்&#8221;. <u>1</u><u> யோவான்</u> <strong><u>4:4</u></strong><strong>  </strong>&#8220;பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடி போவான்.&#8221; <u>யாக்கோபு</u> <strong><u>4:7</u></strong></p>
<p>ஆகையால் சிநேகிதனே, சாத்தானை பார்த்து பயப்படாதே. ஆண்டவர் இயேசுவிடம் வா. அவரிடத்தில் பாதுகாப்பு உண்டு. ஆண்டவர் இயேசுவின் பக்கம் இருந்து அவரை பின்பற்ற நான் விரும்புகிறேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் எனக்கு சாத்தனுக்கு எதிர்த்து நிற்கவும் ஆண்டவர் இயேசுவுக்காக தினம் தோறும் வாழவும் தேவையான சக்தியை கொடுக்கிறார்.</p>
<p><strong><u>ஜெபம்:</u></strong> &#8220;ஆண்டவர் இயேவே, சாத்தானுடைய சோதனைகளின் தாக்குதலுக்கு  எதிர்த்து நிற்க என்னை பலப்படுத்தி எப்பொழுதும் உமக்காக வாழ உதவி செய்யும். ஆமென்&#8221;</p>The post <a href="https://www.hismagnificentlove.com/2020/01/22/tamil-step-22/">முதலடி 22: ஆண்டவராகிய இயேசு சாத்தானை ஜெயித்தவர்</a> first appeared on <a href="https://www.hismagnificentlove.com">His Magnificent Love</a>.]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://www.hismagnificentlove.com/2020/01/22/tamil-step-22/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
